×

பல கோடி மதிப்பு சொத்தை அபகரிக்க முயற்சி... அதிமுக முன்னாள் எம்எல்ஏ அசோக் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: பல கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயற்சி செய்யும் அதிமுகவின் வேளச்சேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ அசோக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ஞானமுருகன்(46) என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் கலாஜெயச்சந்திரன் என்பரின் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறேன். என் முதலாளிக்கு சொந்தமாக வேளச்சேரி புவனேஸ்வரி நகரில் 18 கிராவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு சுற்று சுவர் அமைக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது, அதிமுகவின் வேளச்சேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ அசோக், தனது அடியாட்களுடன் வந்து என்னையும், எனது பணியாளர்களை தாக்கியும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்தார். இதுகுறித்து நான் வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகாரில் படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ைல.

பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி உரிய பாதுகாப்புடன் நிலத்தில் சுற்று சுவர் அமைக்க முயற்சி செய்தோம். அப்போது, முன்னாள் எம்எல்ஏ அசோக் தூண்டுதலில் ரகுபதி தனது அடியாட்களுடன் மீண்டும் வந்து கட்டுமான பொருட்கள் அடித்து உடைத்தனர். இந்த காட்சிகள் அனைத்து சிசிடிவியில் பதிவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MLA ,Office ,Commissioner ,AIADA ,Ashok , Former MLA of AIADMK complains, Commissioner's Office on Ashok
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...