சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள், வரும் 19ம் தேதி காலை 6 மணி முதல் 20ம் தேதி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், மைலாப்பூர், மந்தைவெளி சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை போன்ற பகுதிகளுக்கு வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப் படுகிறார்கள். மேலும், அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள பகுதி -9 (8144930909), பகுதி -13 (8144930913), பகுதி -14 (8144930914) பகுதி -15 (8144930915) ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு ெகாள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி