×

மும்பையில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான மின்னணு பொருட்கள் பறிமுதல்


சென்னை : மும்பையில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான மின்சாதனப் பொருட்கள், செல்போன் உதிரி பாகங்கள், விலை உயர்ந்த கைக்கடிகார உதிரி பாகங்களை கைப்பற்றப்பட்டுள்ளன. தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முறையான ஆவணங்கள் இன்றி மின்னணு பொருட்கள் கொண்டு வரப்படுவதாக சரக்கு மற்றும் சேவை வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ரகசிய தகவலின் அடிப்படையில், சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரி ரவீந்திரநாத் வர்மன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 231 பெட்டிகளில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட செல்போன், ஹார்ட் டிஸ்க், கணினி சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ் ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai , Mumbai, documents, taxes, electronic goods, parcel
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...