×

நிலக்கல்லில் மீண்டும் பதற்றம்...... சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் மீது தாக்குதல்: போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது

நிலக்கல்: சபரிமலைக்கு சென்ற ஆந்திராவைச் சேர்ந்த 45 வயது பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் படதற்றம் ஏற்பட்டது. நடைபந்தல் என்ற இடத்தில் பாலம்மா என்ற பெண்ணை சிலர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தாக்கியதால் காயமடைந்த பாலம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவினர் போராட்டம்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சபரிமலைக்கு பெண்கள் செல்ல முயன்றதால் அங்கு ஐயப்ப பக்தர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில் இன்று 144 தடை உத்தரவு மீறி நிலக்கல்லில் பாஜவினர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தடையை மீறி போரட்டம் நடத்திய பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagaland ,Sabarimala , Sabarimala, land, struggle, BJP, arrested
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு