×

பாஜவுக்கு எதிராக அதிக வாக்குகள் பெறும் முயற்சியில் ஈடுபடுவோம்: சீதாராம் யெச்சூரி பேட்டி

சென்னை: சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி பத்திரிக்கையாளரை சந்தித்தார். அப்போது, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் உடனிருந்தனர்.  யெச்சூரி நிருபர்களிடம் கூறியதாவது:   பாபர்மசூதி இடிப்பின் போது கூட தொண்டர்கள் என்ற பெயரில் பாஜவினரும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினரும் மத்திய பாதுகாப்பு படையினர் மீதும்  ஊடகங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். அதையே தான் இப்போது சபரிமலையில் செய்து கொண்டிருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரை  சபரிமலைக்கு வழிபடச் செல்லும் பெண்களை யாரும் தடுக்கக்கூடாது என்பதுதான்.

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக 6 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை பாஜவும் அதனுடன் நெருக்கமாக உள்ளவர்கள் தான் தாக்கல் செய்துள்ளனர். எனவே அதில் நீதிமன்றம் என்ன முடிவெடுக்கிறது என்பதைபொறுத்திருந்து பார்க்கக்கூட பாஜவும் அதன் துணை அமைப்புகளும் தயாராக இல்லை. சபரிமலையில் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் சக்திகள் மீது சட்டப்படி மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். பாஜவுக்கு எதிராக அதிகபட்ச வாக்குகள் விழுவதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவோம். அணி என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கு மாநிலம் அங்குள்ள தேசிய மாநில அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களின் நிலைமைகளைப் பொறுத்து அமையும்.

மோடிதான்சிரிக்கிறார்
முன்னதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,  கலைஞர்கள் சங்கம் சார்பில் காமராஜர் அரங்கத்தில் கருத்துரிமை போற்றுதல் குறித்த மாநாட்டில் யெச்சூரி கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், ‘‘பெட்ரோல் பங்குகளில் மோடியின் சிரிக்கும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெட்ரோல் போட வருபவர்கள் முகத்தில்தான் சிரிப்பு இல்லை. கவலையுடன் வந்து போகிறார்கள்’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhajan ,Sitaram Yechury , Bjp, Votes, Sitaram Yechury
× RELATED ஜனநாயகத்தின் மீது 10 ஆண்டாக தாக்குதல்...