×

மின் ஊழியர்களின் கவனக்குறைவால் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

சென்னை: முன் அனுபவம் இல்லாத வாலிபர் ஒருவரை மின்ஊழியர்கள் 2 பேர் மின் இணைப்பை சரிசெய்ய ஈடுபடுத்திய போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் வேப்பேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புரசைவாக்கம் கிருஷ்ணாப்பா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை திடீரென மின் பழுது ஏற்பட்டது. இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்படி, அதிகாலை 3.30 மணிக்கு மின் ஊழியர் பெருமாள் (57), சீனிவாசன் (49) ஆகியோர் உதவிக்கு ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்த அரிதாஸ் (35) என்பவரை அழைத்து ெசன்றுள்ளனர்.

கிருஷ்ணாப்பா தெருவில் உள்ள மின் இணைப்பை ஊழியர்கள் இருவரும் அரிதாசை சரி ெசய்ய சொல்லியுள்ளனர். இரவில் அதிகளவில் மழை ெபய்து இருந்ததால் மின் இணைப்பு பெட்டியில் மழைநீர் இருந்துள்ளது. இதை கவனிக்காமல் அரிதாஸ் கைவைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்வாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அரிதாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது முன் அனுபவம் இல்லாத நபரை வேலை வாங்கியதலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Electric worker, electricity, kills
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...