×

தமிழகத்தில் மக்கள் உரிமைக்காக போராடினால் சிறையில் அடைக்கிறார்கள் சுட்டுத் தள்ளுகிறார்கள்: பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

சென்னை: தமிழகத்தில் மக்கள் உரிமைக்காக போராடினால் சிறை அல்லது துப்பாக்கியினால் கொலை செய்யும் நிலை உள்ளது என்று பீட்டர்  அல்போன்ஸ் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா துறைமுகம் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள, மக்கள் விழிப்புணர்வு  பயிலரங்கத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இரா.மனோகர் தலைமை வகித்தார்.   

இதில், திமுக  செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்பி, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அதை  தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  அப்போது, பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் யாராவது மக்கள் உரிமைக்காக போராடினால் ஒன்று அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். அல்லது  துப்பாக்கியினால் கொலை செய்யப்படுவார்கள் என்பதை போன்ற ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. போராடும் நபர்களை அடையாளம் கண்டு  நசுக்குவதை தங்களது அன்றாட வாழ்க்கை முறையாக தமிழக அரசு பின்பற்றி வருகிறது. ‘பேய் அரசு செய்தால் பிணம் திண்ணும் சாத்திரம்’ என்று  பாரதியார் சொன்னார் இன்று அது தான் நடக்கிறது என்றார்.




தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...