×

காவரி மேலாண்மை ஆணையத்தை உடனே கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: காவரி மேலாண்மை ஆணையத்தை உடனே கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். காவரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை நடத்தினால்தான் காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்கும். எனவே காவரி மேலாண்மை ஆணையத்தை கூட்ட நீர்வளத்துறைக்கு பிரதமர் மோடி ஆணையிடக்கோரி முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி ஆணையம் செயல்படாமல் இருப்பது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு ஒப்பாகும் என்று தெரிவித்துள்ளார். காவிரி ஆணையத்தை கூட்டாவிடில் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்துக்கு காவிரி நீரை தர கர்நாடகம் தவறி விட்டது என்று அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும்...