×

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!!

சென்னை: தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், 39 மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு எண்ணிக்கை இயந்திரங்கள் அனைத்தும் 39 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் ஒரு வாக்கு எண்ணும் மையம் என்ற அடிப்படையில் 39 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதில் வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள், மூன்று அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறை தொடர்பாக விரிவான ஆலோசனை நடைபெற்றது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வலியுறுத்தல்களையும் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வழங்கினார்.

The post தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Election ,Satyapratha Chaku ,Chennai ,Election Officer ,Satyapratha Sahu ,Lok Sabha ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...