×

ஸ்டெர்லைட் விவகாரம் பொன்.ராதாகிருஷ்ணன் மீது போலீசில் புகார்

சென்னை : லஞ்சம் கொடுக்க முயன்ற ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் மீது காவல் துறையில் புகார் கொடுக்காமல், அவர்களை காப்பாற்றியதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மக்கள் முன்னணி சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்திய மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் சாலமன் (36) நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு நிருபர்களை சந்தித்த போது தனக்கு லஞ்சம் கொடுக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முயன்றது என்று கூறிய தகவலின் அடிப்படையில், ஸ்டெர்லைட் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஸ்டெர்லைட் நிர்வாகம் லஞ்சம் கொடுக்க முயன்றதை காவல் துறையில் புகாராக கொடுக்காமல் குற்றவாளிகளை காப்பாற்றிய பொன்.ராதாகிருஷ்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ேவண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...