சென்னை: துபாயில் மாதவனுக்கு சொந்தமாக வீடு உள்ளது. அங்கு சொகுசு படகு ஒன்றையும் சொந்தமாக வைத்திருக்கிறார் மாதவன். சமீபத்தில் நயன்தாரா, திரிஷாவை அழைத்து அவர் பார்ட்டி கொடுத்திருக்கிறார். அப்போது நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனும் உடனிருந்தார்.
மாதவன், அவரது மனைவி சரிதா, திரிஷா, நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் படகில் பயணம் செய்து விடுமுறையை கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு இதேபோல் மாதவன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிக்கு பார்ட்டி கொடுத்திருந்தார். இந்த முறை அவர் திரிஷாவையும் அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

