×

மலைபிரதேசத்தில் நடக்கும் கதை

சென்னை: பிலிமாலயா நிறுவனம் ஏ.கே.டி. மணிகண்டன் இணைந்து தயாரிக்கும் படம் கல்ராயன்காடு. எழுதி இயக்குகிறார் ஆனைவாரி அ.ஸ்ரீதர். கதாநாயகன் யாசர், கதாநாயகி காயத்ரி. மற்றும் சேரன்ராஜ், மீசை ராஜேந்திரன், விகாஷ் கீர்த்தி, வேலன் சகாதேவன், மாஸ்டர் கேசவ் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, பிரசாந்த் வெங்கடேசன். எடிட்டிங், கோபாலகிருஷ்ணன்.

கலை, ஸ்ரீதர். இசை, வேலன் சகாதேவன். படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீதர் கூறும்போது, ‘‘மலைபிரதேசமான கல்ராயன்காடு எனும் ஊரில் வசிக்கும் நாயகனுக்கும் அதே மலையில் உள்ள வன அதிகாரிக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. இதில் யார் வென்றார்கள் என்பதே கதை. கல்வராயன் மலைப்பகுதியை சுற்றிய கிராமங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் திரைக்கு வரும்’’ என்றார்.

Tags : Chennai ,Filmalaya ,A.K.T. ,Manikandan ,Anaivari A.Sreedhar. ,Yasar ,Gayathri ,Cheranraj ,Meesai Rajendran ,Vikash Keerthi ,Velan Sahathevan ,Master Keshav ,Prashanth Venkatesan ,Gopalakrishnan ,Sridhar ,Kalrayankadu ,
× RELATED ஸ்வீட்டி நாட்டி கிரேசி விமர்சனம்…