×

போதைப்பொருள் வழக்கில் நடிகை ஸ்ரத்தா கபூருக்கு சம்மன்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையே சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி, போதை பொருள்களை வாங்கியதும் அவற்றை சுஷாந்துக்கு கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரிந்தது. தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ரியாவிடம் 3 நாட்களாக விசாரணை நடத்திய பிறகு அவரை கைது செய்தனர். நடிகை ரியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் 20 பக்க வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் அதில் போதைப்பொருள் விவகாரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், துணை நடிகர்கள் என 25 பேரின் பெயர்களை அம்பலப்படுத்தி உள்ளதாகவும் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. லோனாவாலாவில் உள்ள சுஷாந்தின் பண்ணை வீட்டில் அவ்வப்போது போதை பார்ட்டி நடக்கும். அதில் ஸ்ரத்தா கபூரும் கலந்துகொள்வார் என வாக்குமூலத்தில் ரியா கூறியுள்ளாராம். இதையடுத்து ஸ்ரத்தா கபூரை நேரில் ஆஜராகும்படி அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இதற்கிடையே நடிகை தீபிகா படுகோனின் மேனேஜர் கரிஷ்மாவும் போதை பொருள்கள் வினியோகத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : Sratha Kapoor ,
× RELATED போதை பொருள் வழக்கில் பிரபல நடிகைகள்...