×

புனர்பூ யோகமா தோஷமா?

* ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

ஜோதிடத்தில் பல தோஷங்கள் இருந்தாலும் சில தோஷங்கள் நிழல்போல தொடர்ந்து பல அவமானங்களையும் மன சஞ்சலங்களையும் ஏற்படுத்தும். அந்த சஞ்சலங்கள் வாழ்வில் மறக்க முடியாத காயங்களாக, ரணங்களாக மனதிற்குள்ளே சஞ்சலங்களை கொடுத்துக் கொண்டே இருக்கும். காரணங்கள் அறியாமலும் விடை தெரியாமலும் தேடிக் கொண்டே இருப்போம். அப்படி ஒரு யோகமா? தோஷமா? என புரியமாமல் புதிர் போல் இருக்கும் கிரக இணைவுதான் இந்த புனர்பூ தோஷம்.

புனர்பூ தோஷம் என்றால் என்ன?


முப்பது நாட்களுக்கு ஒருமுறை பூமியை வலம் வரும் சந்திரனும், முப்பது வருடங்களுக்கு ஒருமுறை சூரியனை வலம் வரும் சனியும், இணைந்தோ பார்த்தோ அல்லது நட்சத்திரங்கள் மூலமோ அல்லது பரிவர்த்தனை மூலமோ தொடர்பு ஏற்படுவது புனர்பூ தோஷமாகும். இந்த தோஷத்திற்கு சந்நியாச யோகம் என்றும் சொல்வது உண்டு. சந்நியாசிகள் பெரும்பாலோருக்கு இந்த கிரக இணைவுகள் உண்டு.

எத்தனை வகையான புனர்பூ தோஷம் உள்ளன?

* சனியும் சந்திரனும் சமசப்தமாக அதாவது ஒன்றுக்கொன்று ஏழாம் பார்வை பார்த்துக் கொள்வது புனர்பூ.

* சனி வீட்டில் சந்திரன் இருந்து, சந்திரன் வீட்டில் சனி இருந்து இரண்டும் பரிவர்த்தனை செய்து கொள்வதும் புனர்பூ தோஷம்.

* சந்திரன், சனியின் நட்சத்திரக் கால்களில் இருப்பது புனர்பூ.

* சனி, சந்திரனின் நட்சத்திரக் கால்களில் இருப்பது புனர்பூ.

* சனியும் சந்திரனும் ஒரே ராசியில் இணைந்திருப்பதும் புனர்பூ.

* சனி தனது மூன்றாம் மற்றும் பத்தாம் பார்வையாக சந்திரனை பார்ப்பதும் புனர்பூ.

* சந்திரனும் சனியும் ஒரே நட்சத்திரத்தின் கால்களில் அமர்ந்திருப்பதும் புனர்பூ.

* சனி, சந்திரன் ஒரே ராசி அதிபதிகளின் வீட்டில் அமர்ந்திருப்பதும் புனர்பூ.

புனர்பூ இணைவால் ஏற்பட்ட அறிவியல் மாற்றம்

இணையதளம் என்ற மேம்பாடு 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு வெகு வேகமாக உலகெங்கும் கால் பதிக்கிறது. இந்த இணையதள மேம்பாடு இன்னுமொரு வளர்ச்சிக்கு சென்று ஐ.டி என்ற தகவல் தொழில்நுட்பமாக துறை வேகமாக விரிவடைகிறது. இது மேலும், வளர்ச்சி கண்டு செய்திதாள் ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் கால் பதிக்கிறது. புனர்பூ கிரக இணைவு உள்ளவர்கள் இந்த துறைகளில் ஏராளமானோர் பணிபுரிகின்றனர்.

நவீன வாழ்வியலில் இந்த புனர்பூ தோஷம் எப்படி வேலை செய்கிறது?

நவீனமாக எல்லாம் மாறி வந்தாலும், நமது கலாச்சாரமும் இந்த கிரகங்கள் தொடர்பினால் சில மாற்றங்களை ஏற்படுத்திச் செல்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நமது கலாச்சாரத்தில் ஆண் - பெண் இணைந்து வாழ்வது என்பது திருமணத்திற்கு பின்பே நடக்கும். இந்த புனர்பூ என்ற கிரக சேர்க்கையால்தான் நமது நாட்டிலும் திருமணத்திற்கு முன்பே இணைந்து (Living Together) வாழும் கலாச்சாரம் நுழைந்துள்ளது.

தனிப்பட்ட வாழ்வில் புனர்பூ தோஷம் என்ன செய்கிறது?

சிலர் திருமண வாழ்விற்குள் நுழையும் போதுதான் இந்த கிரக இணைவை உணர்வதற்கான சாத்தியம் உண்டு. ஆம். சிறு வயதில் திருமணம் நடந்துவிட்டால் வாழ்வு வளமாகும். குடும்பத்தின் பொறுப்புகளை முடிக்க வேண்டும். ஏழ்மை நிலையில் திருமணத்தை தள்ளி வைப்பார்கள் பலர். பொறுப்புகளையும் வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என நினைப்பவர்களுக்கு காலம் முட்டு கட்டைகளை மலை போல அடுக்கி காத்திருக்கிறது இவர்களுக்கு.
வசதி வந்தவுடன் திருமணம் செய்ய முயற்சி செய்யும் தருணத்தில், ஒரு வரனை பார்த்து வந்தால், பெண் வீட்டாரிடம் பதில் வராது. பெண் வீட்டில் இருந்து பதில் வரவில்லை என தொடர்பு கொண்டால் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என பதில் வரும்.

இந்த புனர்பூ இணைவு உள்ளவர்கள் பார்த்து சென்றால் திருமணம் நடந்துவிடும். இப்படியே இவர்கள் திருமண பரிகார பொம்மைகளாவே இருப்பார்கள். திருமணம் நிச்சயிக்கபட்டு, திருமணத்திற்கு முன்பு போன் தகவல் தொடர்புகளில் இவர்களைத் தவறாக புரிந்து கொண்டு திருமணம் நின்றுபோகும் வாய்ப்புகள் மிக அதிகம். மேடையேறி திருமணம் நின்று போகும் நிகழ்வுகளும் இவர்களுக்குதான் நடக்கும். திருமணத்தில் சிறப்பாக முடியும் வரை ஒவ்வொரு கணமும் திக்... திக்... திக்... நிமிடங்கள்தான்.

புனர்பூ இணைவில் விதிவிலக்குகள் என்ன?

* இந்த புனர்பூ கிரகங்கள் (சந்திரன் + சனி) இணைந்து இருக்கும் ராசியை அல்லது பாவகத்தை குருவின் அருட்பார்வை கிடைத்தால் யோகமான பலன்கள் ஏற்படும்.

* குரு - சுக்கிரன் கிரகங்கள் இணைந்து பார்த்தாலும் இந்த தோஷங்கள் குறையும் என்பது உண்மை.

* குருவுடன் சந்திரன் இணைந்து சுக்ரனுடன் சனி இணைந்து ஒவ்வொன்றும் சமசப்தமாக பார்தாலும் தோஷம் விலகும். சனியினை குருவும் சந்திரனை சுக்ரனும் பார்ப்பதாலும் இந்த தோஷம் பாதிக்காது.

* ஒரே ராசிகட்டத்தில், அதாவது பாவகத்தில் சனிக்கும் சந்திரனுக்கும் இடையே புதன் இருந்தாலும் இந்த தோஷம் குறையும்.

* பௌர்ணமியில் பிறந்தவர்களுக்கும் இந்த புனர்பூ இணைவு அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.

ஏன் புனர்பூ ஏற்படுகிறது?

நாம் முற்பிறவியில் கர்மங்களின் வெளிப்பாடாகவே இந்த புனர்பூ உள்ளது. கர்மங்கள் என்றால் நீங்கள் சிந்திக்க வேண்டியது சனி கிரகத்தையே. அவன் நமது பாவங்களின் தொகுப்பை முழுமையாக அறிந்து வைத்துள்ளான். இரண்டாவது, சந்திரன் என சொல்லக்கூடிய தாய் வழி முன்னோர்கள் கர்மா. மூன்றாவது, முற்பிறவியில் கண்ணீர்விட்டு அழக்கூடிய அளவிற்கு ஏதேனும் பாவத்தை செய்திருக்க வேண்டும். இந்த வகையான கர்மாக்கள் பிறப்பு ஜாதகத்தில் இப்படி தொடரும்.

புனர்பூ தரும் தொழில்களும் பலன்களும்

* புனர்பூ உள்ளவர்கள் தொழில்களை செய்வதில் திறமையானவர்கள். இவர்கள் வெற்றிக்காக முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

* உணவு தொழில்களில் இவர்கள் இருப்பது மிக சிறப்பைத் தரும். சிலர் சமையல் கலைஞர்களாகவும் சிலர் ேஹாட்டல்களை திறம்பட நடத்துவதில் வல்லவர்களாகவும் உள்ளனர்.

* ஐ.டி துறையில் புனர்பூ இணைவு உள்ளவர்களின் பங்களிப்பு மிக அதிகம். ஐ.டி துறை இவர்களுக்கு வாய்ப்பளிக்கும்.

* செய்தித்தாள், சேனல் ேபான்ற மீடியாக்களிலும், சமூக ஊடகங்களிலும் இவர்களின் பங்களிப்பு அதிகம்.

* சந்நியாசம் பெறுபவர்கள் பலர் இந்த புனர்பூ அமைப்பு உள்ளவர்களாகவே உள்ளனர்.

* மனதை மேம்படுத்த யோகா, தியானம் இவைகளில் கைதேர்ந்தவர்கள்.

* சுயதொழில் செய்வதில் இவர்கள் வல்லவர்கள். மளிகை வியபாரம் மற்றும் மக்களிடம் நேரடி தொழில் தொடர்புடையவர்களாக உள்ளனர்.

* புனர்பூ உள்ளவர்கள் அதிக மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு பிளட் பிரஷர் எனச் சொல்லக்கூடிய ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

* உணவை ருசித்து உண்ணும் குணமுடையவர்களாக இருப்பார்கள்.

* சைனஸ் போன்ற சளித் தொந்தரவுகள் இவர்களுக்கு இருக்கும்.

* சிலருக்கு செரிமானக் கோளாறுகள் வந்து தொந்தரவு செய்யும்.

* நல்லவர்களாகவே இருந்தாலும் இவர்களுக்கு கெட்ட பெயர்கள் உண்டாக்கும்.

* வேலையின் பொருட்டு இவர்களால் உணவை வீட்டில் உண்ண முடியாத சூழ்நிலைகள் உருவாகும்.

கோட்சாரத்தில் புனர்பூ

பிறந்த கால ஜென்ம ராசியை சனி கடந்து செல்வதே புனர்பூ ஆகும். இக்காலக் கட்டத்தில் மனதில் ஏற்படும் பதட்டமே புனர்பூ என்ன என்பதை உணர்வதற்கான சிறந்த உதாரணம்.

புனர்பூவிற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?

* தயிர் சாதம் செய்து சனிக்கிழமையும் திங்கட்கிழமையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கலாம். மீதம் எதுவும் திரும்ப வீட்டிற்கு எடுத்துவர வேண்டாம்.

* புனர்பூ கிரகங்கள் கோட்சாரத்தில் நெருங்கும் காலக் கட்டங்களில் சனிக்கும் சந்திரனுக்கும் அர்ச்சனை பாலில் அபிஷேகம் செய்யலாம்.

* துன்பத்தால் கண்ணீர் விடும் உயிர்களுக்கு பசியாற்றி உதவும் உங்கள் எண்ணம் அவர்களின் ஆசியை பெறச் செய்கிறது. இதனால், உங்கள் தோஷம் நீங்குகிறது எனப் பொருள்.

புனர்பூவிற்கு பரிகாரம் செய்யும் திருத்தலம் எங்கே உள்ளது?

ஈரோடு நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த திருத்தலத்தில் உள்ளே நுழைந்தவுடன் வலது புறத்தில் சந்திர பகவானிற்கும் சனி பகவானிற்கும் தனி சந்நதி உள்ளது. அங்கு சனிக்கிழமை காலையில் புனர்பூ இணைவிற்கு சனிக்கும் சந்திரனிற்கும் தனித்தனியாக அர்ச்சனை செய்து கொள்ளவும். இங்கு சனி பகவான், சந்திர பகவான் சந்நதியும் எதிரெதிரே பார்த்தவாறு உள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பு.

Tags : Punarbhu ,
× RELATED சுந்தர வேடம்