- அக்ஷய் குமார்
- மும்பை
- பாலிவுட்
- கொரோனா
- ஆனந்த் அம்பானி
- ராதிகா வியாபாரி
- சுதா கொங்கரா
- சூர்யா
- அபர்ணா பாலமுரளி
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
மும்பை: பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமாருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு நடிப்பில், கடந்த 2020ல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஹிட்டான படம், ‘சூரரைப்போற்று’. இப்படத்துக்கு நிறைய தேசிய விருதுகள் கிடைத்தது.
தற்போது அப்படம் இந்தியில் ‘சர்ஃபிரா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு திரைக்கு வந்துள்ளது. இந்தியிலும் சுதா கொங்கரா இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். அக்ஷய் குமார், ராதிகா மதன், சரத்குமார், சிறப்புத்தோற்றத்தில் சூர்யா நடித்துள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகளில் அக்ஷய் குமார் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும், புரமோஷன் குழுவில் இருந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அக்ஷய் குமார் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், உடனே அவர் மும்பையிலுள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அதனால்தான் ‘சர்ஃபிரா’ படம் திரைக்கு வந்த அன்று அவரால் ரசிகர்களை நேரில் சந்திக்க முடியவில்லை. மேலும், முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை. முன்னதாக அக்ஷய் குமார், கடந்த 2022ம் ஆண்டிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உடல்நிலை தேறியது குறிப்பிடத்தக்கது.
The post அக்ஷய் குமாருக்கு மீண்டும் கொரோனா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.