×

கார்த்திகை மாத கடை சோமவாரம் நடராஜர் கோயிலில் குவிந்த பெண்கள்

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நேற்று கார்த்திகை மாத கடை சோமவாரம் என்பதால் பெண்கள் குவிந்தனர். கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள்  சோமவாரமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகாலையிலேயே நீராடி தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற விரதமிருந்து நடராஜர் கோயிலில் சித்சபையை 108 முறை வலம் வருவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெண்கள் சோமவாரம் விரதம் கடைபிடிப்பது வழக்கம்.

கார்த்திகை மாதத்தின் கடை சோமவாரமான  நேற்று அதிகாலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான பெண்கள் நடராஜர் சன்னதியையும், கொடி மரத்தையும் வலம் வந்தனர். சிலர் சபையை சுற்றி அங்க பிரதட்சணம் செய்தனர். இதே போன்று கோயிலில் உள்ள ஸ்ரீஆதிமூலநாதர் சன்னதியையும் பெண்கள் 108 முறை வலம் வந்தனர். கார்த்திகை மாதம் என்பதால் நேற்று கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான ஐயப்ப பக்தர்களும் கோயிலில் குவிந்தனர்.

Tags : Nataraja ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் புராதன...