×

தென்பெண்ணையில் பெண் சடலம் மீட்பு

 

கிருஷ்ணகிரி, ஆக.3: உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணையாற்றில் பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே போடூர் தென்பெண்ணையாற்றில் நேற்று 50வயது மதிக்கதக்க பெண்ணின் சடலம் மிதந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காமன்தொட்டி கிராம நிர்வாக அலுவலர் சங்கருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உத்தனப்பள்ளி போலீசில் புகார் அளித்தார்.

இதன் பேரில், சம்பவ இடம் வந்த போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர், அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிச்சென்றனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thenpennai ,Krishnagiri ,Thenpennai river ,Uttanapalli ,Krishnagiri district ,Shankar ,Kamanthoti ,Uttanapalli police ,Thenkanikottai Government Hospital ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு