மதுரை : விருதுநகரில் சீமை கருவேல மரங்களை அகற்ற பொது ஏலம் நடத்த உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, தகுதி உடைய அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக பொது ஏலம் நடத்த வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் தச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்த லிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனு முடித்து வைக்கப்பட்டது.
The post சீமை கருவேல மரங்களை அகற்ற பொது ஏலம் நடத்த வேண்டும் : ஐகோர்ட் appeared first on Dinakaran.
