ஜாம்ஷெட்பூர்: இந்தியாவில் மட்டுமின்றி ஆசிய நாடுகளிலேயே மிகவும் பழமையான கால்பந்து தொடராக துரந்த் கோப்பை போட்டி உள்ளது. 134வது துரந்த் கோப்பைக்கான போட்டிகள், வரும் 23ம் தேதி முதல் ஆக. 23ம் தேதி வரை நடைபெறும். லீக் மற்றும் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இம்பால் (மணிப்பூர்), கோக்ராஜ்ஹர் (அசாம்), ராஞ்சி (ஜார்கண்ட்), ஷில்லாங் (மேகாலயா), கொல்கத்தா (மேற்கு வங்கம்) ஆகிய நகரங்களில் நடைபெறும்.
இப்போட்டிகளில் மொத்தம் 24 அணிகள், தலா 4 அணிகள் கொண்ட 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் களம் காணும். வரும் 23ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில், ஏ பிரிவில் உள்ள ஈஸ்ட்பெங்கால் – சவுத் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. இறுதி ஆட்டம் ஆக. 23ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும்.
The post துரந்த் கோப்பை கால்பந்து வரும் 23ம் தேதி துவக்கம்: ஆசிய நாடுகளில் பழமையானது appeared first on Dinakaran.
