- குகி
- மணிப்பூர்
- கொல்கத்தா
- அகமதாபாத், குஜராத்
- லம்னந்தியம் சிங்
- கண்டோய் சர்மா காங்பிராய்லக்பம்
- மெய்டீயி
கொல்கத்தா: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 10 பணிப்பெண்கள் இருந்துள்ளனர். அவர்களில் மணிப்பூர் மாநிலத்தின் குகி இனத்தை சேர்ந்த லாம்நந்தியம் சிங்சன் மற்றும் மைதேயி இனத்தை சேர்ந்த கந்தோய் சர்மா காங்பிரெய்லாக்பம் ஆகிய இருவரும் அடங்குவர். இவர்களும் விமான விபத்தில் உயிரிழந்தனர். இந்த தகவலறிந்ததும் இவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், மணிப்பூர் மக்கள் என அனைவரும் தங்கள் இன வேறுபாட்டை மறந்து அந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர். தவிர சமூக வலைதளங்களில் அந்த 2 விமான பணிப்பெண்களின் ஆத்மா சாந்தியடைய ஆழ்ந்த இரங்கல்கள் குவிந்தன. இதுகுறித்து டெல்லியில் உள்ள மைதேயி பாரம்பரிய அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘மணிப்பூர் மக்கள் இதயம் நொடிந்து போயுள்ளனர். இனத்தை பொருட்படுத்தாமல், அனைவருமே பிரார்த்தனை செய்தனர். இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக மணிப்பூரில் நடைபெற்று வரும் குக்கி – மைதேயி இன கலவரம், இந்த 2 இளம்பெண்களின் இறப்பால் மங்கியுள்ளது. அவர்கள் வானத்தின் தேவதைகள். அவர்களது மரணம், 2 இனங்களை ஒன்றிணைக்க உதவியுள்ளது. இந்த மனித உயிர் எத்தனை அரியது என்பதை அவர்களுக்கு உணர்த்தி உள்ளது. வாழும் வரை அமைதியாக ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதை அவர்களுடைய மரணங்கள் உணர்த்தி உள்ளது’’ என்றார். இதற்கிடையில், லாம்நந்தியம், கந்தோய் ஆகியோரது குடும்பத்தினர் அகமதாபாத்துக்கு சென்று, உடல்களை அடையாளம் காண, டிஎன்ஏ பரிசோதனைக்காக தங்கள் ரத்த மாதிரிகளை வழங்கினர். உயிரிழந்த லாம்நந்தியம் சிங்சன் குடும்பத்தில் அவர் மட்டும்தான் வருவாய் ஈட்டுபவராக இருந்துள்ளார். இவரது குடும்பத்தினர் காங்போக்பி என்ற பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
The post விமான விபத்தில் உயிரிழந்த குகி, மைதேயி பணி பெண்கள்; மணிப்பூரில் இன பாகுபாடு இன்றி மக்கள் ஒன்று சேர்ந்து இரங்கல் appeared first on Dinakaran.