- சித்தேஸ்வரர் கோயில்
- திருக்காட்டுப்பள்ளி
- சித்திராய்
- திருச்செனாம்பூண்டி
- திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்
- சித்தேஸ்வரர்
- கோவில்
- சிவன்
- திருஞான சம்பந்தர்
- தொல்லியல் துறை...
திருக்காட்டுப்பள்ளி, மே.14: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்செனம்பூண்டி சித்தாம்பிகை உடனுறை சித்தேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சித்தேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிவஸ்தலம் ஆகும். இக்கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. திருக்கானூரை மையமாகக் கொண்டு திருக்கானூர், திருப்புதகிரி, திருச்சடைவளந்தை, திருச்செந்தலை, திருக்காட்டுப்பள்ளி, திருநியமம், திருச்செனம்பூண்டி ஆகிய ஏழூர் சிவன் கோவில்களை உள்ளடக்கி நடைபெறும் சப்தஸ்தான ஸ்தலங்களில் ஒன்றான இக்கோயிலில் தினசரி வழிபாடுகளும், பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இரவு நடைபெற்ற பவுர்ணமி சிறப்பு வழிபாட்டில் சுவாமி, அம்மனுக்கு, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புது வஸ்திரம் சாற்றி, புஷ்ப அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post திருக்காட்டுப்பள்ளி அருகே சித்தேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.
