- நாகர்கோவில்
- ஐயப்பன்
- சங்கரன்புதூர்
- Susindram
- கோகுல்,
- கோபி
- கோகுல்
- சங்கரன்புதூர் வடக்குத் தெரு
- தின மலர்
நாகர்கோவில், மே 13: சுசீந்திரம் அடுத்த சங்கரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன்(33). சம்பவத்தன்று இவர், தனது நண்பர் கோகுல் என்ற கோபி (28) என்பவருடன் மது அருந்தினார். பின்னர் சங்கரன்புதூர் வடக்கு தெருவில் உள்ள கோகுல் வீட்டு முன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோகுல், ஐயப்பனை அடித்து கீழே தள்ளினார். பின்னர் கத்தியை எடுத்து குத்தி உள்ளார். இதில் ஐயப்பன் படுகாயம் அடைந்தார். அந்த பகுதியில் நின்றவர்கள் ஐயப்பனை மீட்டு, நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஐயப்பனின் சகோதரி அளித்த புகாரின் பேரில், சுசீந்திரம் போலீசார் கோகுல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
The post போதையில் தகராறு நண்பருக்கு கத்திக்குத்து வாலிபர் கைது appeared first on Dinakaran.
