- Visika
- பாஜா
- பாலமகா
- விஜய் கட்சி
- துணை
- ஆடமுக
- புதுச்சேரி
- பரம முதல்வர்
- மாலவன்
- திருப்புவானா
- பாலமகா
- ஆதிமுகா
புதுச்சேரி: ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி அதிமுகவும், விஜய் கட்சியும் என்னை வீழ்த்தி விட முடியாது. அவர்களுக்கான கூட்டணி கதவை மூடிவிட்டேன் என்று திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரி அடுத்த திருபுவனையில் புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு, சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
விழாவில் திருமாவளவன் பேசியதாவது:
கிராமங்கள்தோறும் அம்பேத்கர் சிலைகள் அமைப்பதை விட அவர் பெயரில் ஒரு படிப்பகத்தை கட்டி எழுப்ப வேண்டும். அதுதான் அடுத்த தலைமுறைக்கு செய்யக்கூடிய பெரும் செயல். மாணவர்களுக்கு படிக்கின்ற பழக்கத்தை உருவாக்க வேண்டும், படிப்பது என்பது ஒரு கலை. 40 ஆண்டுகளுக்கு முன் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியாக பாஜ இருந்தது, சாதி ஒழிப்பு, சகோதரத்துவம், சமத்துவம், இட ஒதுக்கீட்டை வெளிப்படையாக ஆதரிக்காத கட்சி ஒன்று இந்தியாவில் உண்டு என்றால், அது பாஜ தான். பாஜ என்றைக்காவது சாதி ஒழிக என்று சொன்னது உண்டா, பெண்களுக்கான சமத்துவத்தை பெண்களுக்கான உரிமைகளை முன்னிறுத்தி உயர்த்தி பேசியது உண்டா? சாதி வழக்கத்தை எதிர்த்து ஆர்எஸ்எஸ் இயக்கம் என்றைக்காவது போராடியது உண்டா?
நான் கூட்டணிக்காக எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருக்கவில்லை. பாஜக, அதிமுகவோடும் தேவைப்பட்டால் மற்ற கட்சிகளோடு கூட்டணிக்காக ஒரே நேரத்தில் இரண்டு அணியிலும் பேசிக்கொண்டே இருக்கிற ராஜதந்திரம் எனக்கு தெரியாது. பாஜவும், பாமகவும் இருக்கும் அணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது. புதிதாக கட்சி தொடங்கி இருக்கிற நடிகர் விஜய் கூட புத்தக வெளியீட்டு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தபோது அது ஒரு தவறான யூகத்தை கொடுத்து விடக்கூடாது. நாம் இருக்கிற அணியில் தொடர வேண்டும். ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அதன் மூலம் நாம் இருக்கிற அணி பலவீனப்பட்டால் பாஜவுக்கு சாதகமாக அரசியல் சூழல் மாறிவிடும். இதையெல்லாம் யூகித்து அந்த விழாவையே புறக்கணித்தேன். எனக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த அதிமுக கதவை மூடியது போன்று விஜய் திறந்து வைத்திருந்த கதவையும் மூடினேன்.
பாஜ கூட்டணியில் இருக்கும் அதிமுக ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி, 4 அல்லது 5 அமைச்சர்கள் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறினார்கள். இப்படி ஆசைவார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது. அரசியலில் எடுக்கிற முடிவு ஒவ்வொன்றும் அம்பேத்கரின் கருத்துக்களை மனதில் வைத்துக் கொண்டு தான் எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post பாஜவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக சேராது; ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி ஆசை காட்டிய விஜய் கட்சி, அதிமுக: என்னை விலைக்கு வாங்க முடியாது appeared first on Dinakaran.