×

நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

புதுடெல்லி: காஷ்மீரில் பஹல்காமாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ள அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்திருந்தது.

இதன்படி இன்று மாலை 6 மணிக்கு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க., காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி:
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக எங்கள் கண்டனத்தை பதிவு செய்தோம். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் முழு ஆதரவை தெரிவித்துள்ளோம் என்று கூறினார். மேலும் பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

The post நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Jammu and ,Kashmir ,New Delhi ,Pahalkama ,Union Government ,Pahalkam attack incident ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த...