×

கடந்த 10 ஆண்டில் வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி ரூ.16.35 லட்சம் கோடி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: கடந்த 10 ஆண்டில் வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி ரூ.16.35 லட்சம் கோடி என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். வாராக்கடன் தள்ளுபடியல்ல; வங்கி நிதிநிலை அறிக்கையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும் நிர்மலா விளக்கம் அளித்தார். 2014-15-ல் வாராக்கடன் விலக்கி வைப்பு ரூ.58,786 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.16.35 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த வாராக்கடன்களில் பெருநிறுவனங்களின் பங்கு மட்டும் ரூ.9.26 லட்சம் கோடியாகும் என தெரிவித்தார்.

The post கடந்த 10 ஆண்டில் வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி ரூ.16.35 லட்சம் கோடி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi ,Nirmala ,Dinakaran ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...