×
Saravana Stores

மருதுபாண்டியர்களின் குருபூஜை ஓபிஎஸ், தலைவர்கள் மரியாதை

காளையார்கோவில்: ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் போராடிய மருதுபாண்டியர் சகோதரர்கள் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் 223வது குருபூஜை நேற்று நடைபெற்றது. கோவை காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் யாக பூஜைகளுடன் 550 பால்குடங்கள், 30 முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து மருதுபாண்டியர் சமாதியில் பாலாபிஷேகம் செய்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன், பாஜக எச்.ராஜா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக மாவட்டச் செயலாளர் திருவேங்கடம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி உள்பட பல்வேறு தரப்பினரும் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post மருதுபாண்டியர்களின் குருபூஜை ஓபிஎஸ், தலைவர்கள் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Gurupuja ,Marutubandiyas ,Kalayarcoil ,Guru ,Puja ,Marutubandyar ,Coimbatore ,Kamachipuram ,Atheenam Sivalingeswara swami ,Maruthupandi ,
× RELATED குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் 30ம் தேதி எடப்பாடி மரியாதை