×
Saravana Stores

மீனவர்களுடன் தவெக.வினர் மோதல்

புதுச்சேரி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநாட்டை முடிந்துகொண்டு சென்னையை சேர்ந்த 15 பேர் 3 கார்களில் புதுச்சேரி சென்றனர். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்தபோது வம்பாகீரப்பாளையம் ரோட்டில் அதே பகுதியை சேர்ந்த மீனவர் சக்திவேல் (50) என்பவரது பைக் மீது உரசியபடி சென்றதாக தெரிகிறது.

இதனை தட்டிக்கேட்டதால் அவரை காரில் வந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனை தட்டிகேட்ட மீனவர் வடிவேல் (35) என்பவரையும் தவெகவினர் தாக்கியுள்ளனர். இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அவர்கள் வந்த காரை அடித்து நொறுக்கினர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த சக்திவேல், வடிவேலை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கார்களில் வந்த அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மீனவர்களுடன் தவெக.வினர் மோதல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Chennai ,Thaveka conference ,Vikravandi ,Villupuram district ,Sakthivel ,Vambakeerapalayam road ,
× RELATED முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு