×
Saravana Stores

டூவீலரில் சென்றபோது விபத்தில் பெண் பலி

 

ராமேஸ்வரம்,அக்.23: ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் நடராஜபுரத்தைச் சேர்ந்த நம்புக்குமார் மனைவி நித்யா(26). ராமேஸ்வரத்தில் உள்ள துணிக்கடையில் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். துணிக்கடைக்கு வேலைக்கு செல்வதற்காக அதே பகுதியைச் சேர்ந்த பத்ரிநாத்(18) என்பவரின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு நேற்று சென்றுள்ளார்.

மழை தூறியதால், இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் குடை பிடித்து சென்ற நித்யா, காற்றினால் குடையுடன் நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். அப்போது தனுஷ்கோடியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்த வேன் அவர், மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது. ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர்கள் பரிசோதித்தில் அவர் இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தனுஷ்கோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலரில் சென்றபோது விபத்தில் பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Namkumar ,Nitya ,Natarajapuram ,Dhanushkodi ,Badrinath ,
× RELATED இலங்கை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் விடுதலை