×
Saravana Stores

ஊட்டி புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது

 

ஊட்டி, அக். 23: நீலகிரியில் கடந்த ஜூலை மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. தொடர்ந்து சில நாட்கள் மட்டுமே இடைவெளி கிடைத்தது. மீண்டும் கடந்த மாதம் முதல் ஊட்டியில் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஊட்டியில் இரவு நேரங்களில் மழையும், பகலில் மேக மூட்டமும் காணப்படுகிறது. புறநகர் பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கிறது. குறிப்பாக, ஊட்டி அருகே முத்தோரை பாலாடா, கப்பத்தொரை போன்ற பகுதிகளில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. நேற்று ஊட்டியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் சாரல் மழை பெய்தது.

மேலும், ஊட்டி புறநகர் பகுதியான முத்தோரை பாலாடா, கப்பத்தொரை ஆடா, நஞ்சநாடு போன்ற பகுதிகளில் நேற்று மதியம் கன மழை பெய்தது. இதனால், இங்குள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கின, பாதிக்கப்பட்டன. இதனால், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நாள் தோறும் சாரல் மழை பெய்து வரும் நிலையில், தற்போது ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் குளிரும் அதிகரித்துள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அனைவரும் வெம்மை ஆடைகளுடனே வலம் வருகின்றனர்.

The post ஊட்டி புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவ மழையால் தாவரவியல்...