×
Saravana Stores

மின்கசிவு காரணமாக ஐஸ் கிரீம் கடையில் தீ விபத்து

 

கோவை, அக்.23: கோவை சாய்பாபாகாலனி என்எஸ்ஆர் சாலையில் ஐஸ் கிரீம் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 4.45 மணிக்கு இந்த கடையில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட தீ கடை முழுவதும் மளமளவென பரவியது. இதனால் அங்கு புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து தகவல் அறிந்த கோவை சாய்பாபா காலனி போலீசார் மற்றும் கவுண்டம்பாளையம் தீயனைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ஐஸ் கிரீம் கடையில் பற்றி எறிந்த தீ அருகில் இருந்த மற்ற கடைகளுக்கு பரவுவதற்குள் கவுண்டம்பாளையம் தீயனைப்பு துறையின் நிலை அலுவலர் மனிகண்டன் தலைமையிலான தீயனைப்பு குழுவினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக ஐஸ் கிரீம் கடையில் இருந்த பொருட்கள் கருகி நாசமாகின. மின் கசிவு ஏற்பட்டவுடன் சுதாரித்துக்கொண்ட பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கடையில் இருந்து உடனடியாக வெளியே வந்ததால் உயிர் சேதமோ, தீக்காயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை.

The post மின்கசிவு காரணமாக ஐஸ் கிரீம் கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : KOWAI ,KOWAI SAIPABAKALANI NSR ROAD ,Dinakaran ,
× RELATED கோவையில் செவிலியர்களை படம் எடுத்த காவலர் சஸ்பெண்ட்..!