×
Saravana Stores

புதன்சந்தையில் ₹1.80 கோடிக்கு மாடுகள் விற்பனை

சேந்தமங்கலம், அக்.23: புதன்சந்தையில் விற்பனை மாடுகள் வரத்து குறைந்து, ₹1.80 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம்வரை நடைபெறும். சந்தையில் மாடுகளை வாங்க விற்க ஆந்திரா, கர்நாடகம், கேரளா, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் வருவார்கள், கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக நேற்று கூடிய மாட்டுச்சந்தையில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இருந்து பால் மாடுகள், இறைச்சி மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழக உள் மாவட்டங்களில் மாடுகளை வாங்க குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் வெளி மாநிலங்களுக்கு மாடுகள் விற்பனை குறைந்தது. கேரளாவில் கடல் மீன்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால், அங்கு இறைச்சி மாடுகள் விற்பனை குறைந்து வருகிறது. அங்கிருந்து குறைவான வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்திருந்தனர். இதனால் மாடுகளின் விலை குறைந்தது. இறைச்சி மாடுகள் ₹23 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ₹46 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் ₹14ஆயிரத்திற்கு விற்பனையானது. இதில் மொத்தம் ₹1.80 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

The post புதன்சந்தையில் ₹1.80 கோடிக்கு மாடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Puduchattaram ,Andhra ,Dinakaran ,
× RELATED பேளுக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணி தீவிரம்