×
Saravana Stores

சாலையோர குட்டையில் பெண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை

பள்ளிபாளையம், அக்.23: திருச்செங்கோட்டில் இருந்து கொக்கராயன்பேட்டை வரும் வழியில் கொல்லபாளையம் கிராமத்தில் சாலையோரம் இருந்த குட்டையில், கடந்த ஞாயிற்றுகிழமை 40வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மிதந்தது. இறந்து கிடந்த பெண் நைட்டி அணிந்திருந்தார். அவரது கையின் இடது மணிக்கட்டில் சிவா எனவும், இடது மார்பின் மேல் பகுதியில் கவியரசு என்றும் டாட்டூ வரையப்பட்டிருந்தது. சடலமாக கிடந்தவர் யார், எந்த ஊர் என்ற விபரம் ஏதும் தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த மொளசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலையோர குட்டையில் பெண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Kollapalayam ,Tiruchengode ,Kokkarayanpet ,
× RELATED கனமழை காரணமாக ரயில்வே நுழைவுப்...