×
Saravana Stores

பிளஸ் 1 மாணவியிடம் பாலியல் சில்மிஷம் திருமணமான வாலிபர் மீது போலீசில் புகார்

குடியாத்தம், அக்.23: குடியாத்தத்தில் பிளஸ் 1 மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக திருமணமான வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவரது 17 வயது மகள் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த திருமணமான 28 வயது வாலிபர், மாணவியிடம் நட்பு ஏற்படுத்திக்கொண்டு பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி இரவு மாணவியை தனியாக அழைத்துச்சென்று அவரிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பிளஸ் 1 மாணவியிடம் பாலியல் சில்மிஷம் திருமணமான வாலிபர் மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,Kudiatham ,Vellore district ,
× RELATED ‘அடிப்படை வசதிகளை கேட்டால் கொலை செய்து விடுவேன்’ குடியாத்தம் அருகே