×
Saravana Stores

24 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் வட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை வேலூரில் டீக்கடைகள், ஓட்டல்களில் ரெய்டு

வேலூர், அக்.23: வேலூரில் டீக்கடைகள், ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்ட 24 காஸ் சிலிண்டர்களை வட்டர வழங்கல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய காஸ் சிலிண்டர்கள் முறைகேடாக வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி கலெக்டர் சுப்புலட்சுமி வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறன் தலைமையிலான வருவாய்த்துறை குழுவினர் நேற்று பில்டர்பெட்ரோடு, காந்திநகர் பகுதிகளில் திடீரென சோதனை செய்தனர்.
அப்போது, பல்வேறு டீக்கடைகள், ஓட்டல்களில் முறைகேடாக வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அவ்வாறு பயன்படுத்திய 24 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை காஸ் ஏஜென்சியில் ஒப்படைக்கப்பட்டது. முறைகேடாக சிலிண்டர்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

The post 24 வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் வட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை வேலூரில் டீக்கடைகள், ஓட்டல்களில் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Officer ,Vellore district ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...