×
Saravana Stores

புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே ஒரே மாதத்தில் 2 வது கொள்ளை

பொன்னமராவதி, அக். 23: பொன்னமராவதி அருகே க.புதுப்பட்டியில் ஒரே மாதத்தில் மீண்டும் ஒரு வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் புதுப்பட்டியில் கடந்த 6ம்தேதி ராஜா, கார்த்திக்குகன், குமரப்பன். இவர்கள் 3 பேரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டும், பீரோக்கள் உடைக்கப்பட்டும் 20 பவுன் நகை, 20 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பணம் கொள்ளை சம்பவம் நடந்தது.

இந்நிலையில் அதே ஊரில் அழகப்பன் மனைவி பார்வதி என்பவரின் பூட்டிய வீடு உடைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கோவையில் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களின் வீட்டின் காம்பவுண்டிற்குள் பார்வதியின் தாயார் பஞ்சவர்ணம் வசித்து வருகிறார். இவர் நேற்று காலை இவர்களது வீட்டின் பக்கத்தில் ஒரே காம்பவுண்டிற்குள் இருக்கும் மகள் வீட்டினை பார்த்து லைட்டை ஆப் செய்ய சென்றுள்ளார். அப்போது கதவுகள் மற்றும் பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

இதையடுத்து பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தங்க செயின், மோதிரம், நெக்லஸ் உள்ளிட்ட 10 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பூட்டிய வீட்டினை உடைத்து கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

The post புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே ஒரே மாதத்தில் 2 வது கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Pudukottai Ponnamaravati ,Ponnamaravathi ,Budhupatti ,Ponnamaravati ,Raja ,Karthikugan ,Kumarappan ,Kandiyanantham Pudhupatti ,Pudukottai Ponnamaravathi ,
× RELATED மறைமலைநகர் ஸ்ரீவாரி நகரில் சிறுவர்...