×
Saravana Stores

காவலர் வீர வணக்க நாள்

சிவகங்கை, அக்.22: சிவகங்கையில் காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியில் இருந்த போது இறந்த சப்.இன்ஸ்பெக்டர்கள் சங்கரலிங்கம் மற்றும் ஆல்வின்சுதன் இருவரின் நினைவாக நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக காவலர்களை வைத்து நினைவுத்தூண் கட்டப்பட்டது. நேற்று நடைபெற்ற காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் 21 குண்டுகள் முழங்க நினைவுத் தூணில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷாஅஜித், மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் இறந்த காவலர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

The post காவலர் வீர வணக்க நாள் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Hero ,Day Program ,Sub. ,Sivaganga Armed Forces Stadium ,Inspectors ,Sankaralingam ,Alvinsuthan ,Heroic Hello Day ,
× RELATED தனியார் வங்கியில் அடகு வைத்த ரூ.2 கோடி...