×
Saravana Stores

போடி அருகே டூவீலர் மீது டிராக்டர் மோதி விபத்து: டிரைவர் கைது

 

போடி, அக். 21:தேனி மாவட்டம் போடி அருகே புதுக்கோட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெயலால் மகன் கலைச்செல்வன்(20), சிவகங்கை மாவட்டம், அளவாக்கோட்டையை சேர்ந்த திருமுகம் மகன் விக்னேஸ்வரன்(25) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன் தினம் விக்னேஸ்வரன் டூவீலரில் கலைச்செல்வனை அழைத்துக்கொண்டு புதுக்கோட்டை – மறவபட்டி சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிரே வேகமாக வந்த டிராக்டர் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் விக்னேஸ்வரன் படுகாயமடைந்தார். இதையடுத்து போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக தேனி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து, டிராக்டர் டிரைவர் தேவாரம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுருளி மகன் அழகுராஜாவை கைது செய்தார். மேலும், டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post போடி அருகே டூவீலர் மீது டிராக்டர் மோதி விபத்து: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Bodi ,Jayalal ,Kalaichelvan ,Sengampattu ,Thiruvannamalai district ,Thirumugam ,Vigneswaran ,Mulagakottai, Sivagangai district ,Pudukottai ,Bodi, Theni district ,Dinakaran ,
× RELATED போடி மெட்டு அருகே மலைச்சாலையில் மண்...