×
Saravana Stores

ஆண்டுக்கு 2 முறை தேஜ தலைவர்கள் கூட்டம்: பிரதமர் மோடி விருப்பம்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 முறை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். சண்டிகரில் நேற்று முன்தினம் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களின் கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் தேஜ கூட்டணியின் முதல்வர்கள்,துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேஜ கூட்டணி தலைவர்களின் கூட்டத்தை ஆண்டுக்கு 2 முறை கூட்ட வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாஜ கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 1975ம் ஆண்டு அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் அல்லாத அரசியல் கட்சிகளின் மிக பெரிய கூட்டம் இது. இதே போல் ஆண்டுக்கு 2 முறை தேஜ தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நம்பிக்கையையும் ஆதரவையும் தேஜ பெற்றுள்ளது என்று பேசினார் என குறிப்பிட்டுள்ளது.

The post ஆண்டுக்கு 2 முறை தேஜ தலைவர்கள் கூட்டம்: பிரதமர் மோடி விருப்பம் appeared first on Dinakaran.

Tags : Modi ,NEW DELHI ,PM ,NATIONAL DEMOCRATIC ALLIANCE ,Chandigarh ,
× RELATED கதிசக்தி திட்டம் 3 ஆண்டு நிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்