×
Saravana Stores

தாளவாடி மலைப்பகுதி சாலையில் பகலில் நடமாடிய காட்டு யானை


சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் இருந்து தலைமலை செல்லும் சாலையில் பகலில் நடமாடிய ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் பாதிப்பு அடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. வனப்பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் பகல் நேரங்களில் சாலைகளில் நடமாடுவதும், வாகனங்களை வழி மறிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

இதற்கிடையே தாளவாடி மலைப்பகுதியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் நெய்தாளபுரம் அருகே நேற்று மாலை ஒரு காட்டு யானை அங்கும் இங்கும் நடமாடியது. இதனால் அவ்வழியே சென்ற மலை கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் யானை நடமாட்டத்தால் அச்சமடைந்து காட்டு யானை வனப் பகுதிக்குள் செல்லும் வரை காத்திருந்து சென்றனர். பகல் நேரத்தில் சாலையில் நடமாடும் காட்டு யானைகளை வனத்துறையினர் கண்காணித்து சாலையில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தாளவாடி மலைப்பகுதி சாலையில் பகலில் நடமாடிய காட்டு யானை appeared first on Dinakaran.

Tags : Talawadi Highland Road ,Sathyamangalam ,Talawadi ,Satyamangalam Tigers Archive of Erode District ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் நகர்மன்ற கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்