×

பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இன்ஸ்டாகிராம் வாலிபர் போக்சோவில் கைது அரக்கோணத்தை சேர்ந்தவர் வேலூரில் 10ம் வகுப்பு வரும்

வேலூர், அக்.18: வேலூரில் 10ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த இன்ஸ்டாகிராம் வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். வேலூரைச் சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி, பின்னர் வீடு திரும்பவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வேலூர் தெற்கு போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தனர். அதில், `எங்கள் மகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த விக்கி (23) அடிக்கடி பேசி வந்துள்ளார். எனவே எங்கள் மகளை அவர் கடத்தி சென்றிருக்கலாம்’ என தெரிகிறது. எனவே எங்கள் மகளை மீட்டு தாருங்கள் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விக்கியை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், பள்ளி மாணவியான சிறுமியை வாலிபர் விக்கி, திருமணம் செய்து கொண்டது போலீசாருக்கு தெரியவந்தது. பின்னர் போலீசார் மாணவியை மீட்டனர். தொடர்ந்து சிறுமியை கடத்தி திருமணம் செய்ததால், அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

The post பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இன்ஸ்டாகிராம் வாலிபர் போக்சோவில் கைது அரக்கோணத்தை சேர்ந்தவர் வேலூரில் 10ம் வகுப்பு வரும் appeared first on Dinakaran.

Tags : Instagram ,Pocso ,Arakkonam ,Vellore ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பழகி பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல்