×

எளிய மருத்துவ குறிப்புகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

*புதினா இலையின் சாற்றுடன் தேன் கலந்து குடிக்க மாதவிடாய் ஒழுங்காகும்.

*தூதுவளை இலைகளை அரைத்து நீரில் நன்றாக கொதிக்க வைத்து கஷாயமாக பருக இருமல், சளி குறையும்.

*சித்தரத்தைத் தூளை தேனில் கலந்து நாள்தோறும் இருவேளை சாப்பிட்டு வர தொண்டை சார்ந்த நோய்கள், இருமல் போன்றவை விரைவில் குணமாகும்.

*அதிமதுரத்தை அரைத்து உடலில் பூசி குளித்து வர சொறி, சிரங்கு குணமாகும்.

*நந்தியாவட்டை இலைகளை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்து வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

*பிரண்டை இலைகளுடன் உப்பு, புளி, பூண்டு, சின்னவெங்காயம் சேர்த்து துவையலாக சாப்பிட செரிமானக் கோளாறுகள் மறையும்.

*கீழாநெல்லி இலையை உப்பு சேர்த்து அரைத்து பூசி, உடலில் ஊறவிட்டு பின் குளிக்க தோல் நோய்கள் குணமாகும்.

*வேப்பம் பூ ரத்தத்தை சுத்தப்படுத்தும். பித்த நோய்களை குணப்படுத்தும்.

*வெற்றிலையுடன் குங்குமப்பூ சேர்த்து சாப்பிட இயல்பான பிரசவம் ஏற்படும்.

*மகிழமரத்தின் பட்டையை பொடியாக்கி பல் துலக்கிட பல்வலி குணமாகும்.

*சுரைக்காயை அடிக்கடி சாப்பிட தொப்பை குறையும்.

*மாதுளம்பழம் சாப்பிட குடல்புழுக்கள் அழியும். வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

*வில்வ மரத்தின் பூவுடன் புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட குடல் வலிமை பெறும்.

*திராட்சைப் பழச்சாறு நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்ணை குணமாக்கும்.

*வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போது மோரில் கலந்து குடிக்க, வயிற்றுவலி தீரும்.

*அவரை இலைச் சாறை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும்.

*செம்பருத்திப் பூவை காயவைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு பாலில் கலந்து உண்டுவர மலச்சிக்கல் இருக்காது.

*தூதுவளை இலைச்சாறு இரண்டு சொட்டை காதில் விட காது அடைப்பு நீங்கும்.

*நெல்லிக்காயை இடித்துச் சாறு பிழிந்து அதனுடன் தேன் சேர்த்து அருந்த விக்கல் நிற்கும்.

*முற்றிய மாவிலையை பொடியாக்கி தணலில் போட்டு, சுவாசித்தால் விக்கல் குணமாகும்.

*தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியம்

The post எளிய மருத்துவ குறிப்புகள்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED நார்சிசம்… தன்வழிபாட்டு ஆளுமைக் கோளாறு!