×

மழைநீர் தேக்கம்: 4 விரைவு ரயில்கள் ரத்து

சென்னை: சென்னை பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையேயான வழித்தடத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் 4 ரயில்கள் ரத்து செய்யபப்ட்டுள்ளது. திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இன்று மாலை 6.05 மணிக்கு புறப்பட வேண்டிய சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யபப்ட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு ஈரோடு புறப்பட வேண்டிய ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரத்து செய்யபப்ட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 4.35 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யபப்ட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 9.15 மணிக்கு புறப்பட வேண்டிய மைசூரு காவிரி எக்ஸ்பிரஸ் சத்து செய்யபப்ட்டுள்ளது.

The post மழைநீர் தேக்கம்: 4 விரைவு ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Basin Bridge ,Vyasarpadi ,Saptagiri Express ,Tirupati ,Chennai Central ,Chennai Central… ,
× RELATED ஓசியில் சிக்கன் ரைஸ் கேட்டு...