×

தியாகருகம் பேருந்து நிலையத்தில் கல்லால் அடித்து மூதாட்டி கொலை

*எஸ்பி நேரில் விசாரணை

தியாகதுருகம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று காலை வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் பேருந்து நிலையத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக ஒருவர் தூங்கிக்கொண்டு இருப்பதை பார்த்த தூய்மை பணியாளர்கள் அவருக்கு அருகில் சென்றனர். அப்போது ரத்த வெள்ளத்தில் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் தியாகருகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி எஸ்பி, ரஜத் சதுர்வேதி, டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகே உள்ள கடைக்காரர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் ராக்கி மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மூதாட்டி, தியாகதுருகம் ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மனைவி ரங்கநாயகி (86) என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

மேலும் மூதாட்டி அணிந்திருந்த மூக்குத்தியை திருடிக்கொண்டு, அவரை கல்லால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், மூதாட்டியை கொலை செய்தவர் யார் என்றும், கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தியாகதுருகம் பேருந்து நிலைய வளாகத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

The post தியாகருகம் பேருந்து நிலையத்தில் கல்லால் அடித்து மூதாட்டி கொலை appeared first on Dinakaran.

Tags : Thiyakarkam bus station ,Kalalakurichy district ,Diyakarkam Bus Station ,Dinakaran ,
× RELATED சென்னை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2...