×

13 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார்


ஆவடி: நெமிலிச்சேரி, தேவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா (25). இவரது கணவர் மணிகண்டன் (28). கடந்த ஜூன் 5ம் தேதி, இருவரும் வேலைக்கு சென்றனர். அன்று இரவு, மணிகண்டன் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 34 சவரன் நகை திருடு போனது தெரிந்தது. புகாரின் பேரில் பட்டாபிராம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட சேலையூர், பதுவஞ்சேரி, நேசமணி தெருவைச் சேர்ந்த சகாயராஜ் (47) என்பவரை கைது செய்தனர். பிறகு பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 13 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

The post 13 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Lavanya ,Devi Nagar ,Nemilicherry ,Manikandan ,
× RELATED பலரிடம் கடன் வாங்கி முதலீடு ஆன்லைன்...