×

பவளவிழாவையொட்டி தலைஞாயிறு பேரூர் பகுதியில் திமுக கொடியேற்றம்

 

வேதாரண்யம், செப்.20: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றிய, பேரூர் பகுதியில் திமுகவின் 75வது ஆண்டு பவள விழாவையொட்டி தலைஞாயிறு ஒன்றிய பேரூர் கழக அலுவலகத்தில் மூத்த முன்னாடி வாட்டாகுடி கிளை செயலாளர் கோவிந்தராஜ் திமுக கொடியை ஏற்றினார். விழாவிற்கு தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார், தலைஞாயிறு பேரூர் செயலாளர், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கற்பகம் நீலமேகம், மாவட்ட திமுக பிரதிநிதி ஆரோக்கியம், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் தொண்டராணி துணை அமைப்பாளர் புவனேஸ்வரி செந்தில்குமார், வாட்டாகுடி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரவி, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் சுந்தர பிரபாகரன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் வீரக்குமார், ஒன்றிய பிரதிநிதி சந்தானம், வார்டு கவுன்சிலர் அஜய்ராஜா, ஓடியம்புலம் ஞானசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கழகத்தின் மூத்த முன்னோடிகள் கோவிந்தராஜ், ஆரோக்கியம், ராஜேந்திரன் ஆகியோர்களுக்கு பொன்னாடை போர்த்திகௌரவிக்கப்பட்டனர்.

The post பவளவிழாவையொட்டி தலைஞாயிறு பேரூர் பகுதியில் திமுக கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Thalaignairu Perur ,Coral Festival ,Vedaranyam ,Senior ,Munnadi Watagudi ,branch secretary ,Govindaraj ,Perur ,Vedaranyam taluk ,taluk ,Perur Kazhagam ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலய முகப்பில் திமுக...