×

மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு

சென்னை: மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. பெண் மருத்துவரின் பாலியல் புகார் காரணமாக மருத்துவர் சுப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பணியிடை நீக்கத்தை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சுப்பையா மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரத்தில் பதில் தர அரசுக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வு உத்தரவு அளித்துள்ளனர்.

The post மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Refusal ,Doctor ,Supbaia ,Chennai ,Chennai High Court ,
× RELATED நடிகைகள் குறித்த அவதூறு பேச்சுக்காக...