×

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இருசக்கர வாகனம் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு..!!

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையின் மைய பகுதியில், நிறுத்தப்பட்டிருந்த வாடிக்கையாளர் ஒருவரது இருசக்கர வாகனம் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். இருசக்கர வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. வாகனத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு தீ மள மளவென பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் விபத்து குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இருசக்கர வாகனம் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Coimbed Vegetable Market ,Chennai ,
× RELATED பூண்டு விலை கிடுகிடு உயர்வு.....