×

காடாம்புலியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 2 லட்சம் பறிமுதல்

கடலூர் : காடாம்புலியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வரும் பொது மக்களிடம் அதிகம் லஞ்சம் பெறுவதாக வரப்பெற்ற தகவலை அடுத்து கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட ஆய்வுக்குழு ஆய்வாளர் சுஜாதா தலைமையில் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் காடாம்புலியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத லஞ்சப்பணம் ரூபாய் 2 லட்சத்து 17 ஆயிரம் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post காடாம்புலியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 2 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Cadampulyur Press Office ,Cuddalore ,Cuddalore Corruption Prevention and Monitoring Unit ,Deputy Superintendent ,Sathyaraj ,Kadampulyur Press Office ,Dinakaran ,
× RELATED குப்பை கிடங்கில் தீ விபத்து