×

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறித்த ரவுடி கைது

தூத்துக்குடி, செப். 12: தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (27). பிரபல ரவுடியான இவர் மீது அடிதடி, கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் அத்துமீறி நுழைந்த வினோத்குமார், அங்கு பணியில் இருந்த ஊழியர் வேதமாணிக்கம் என்பவரிடம் கத்தியைக் காட்டி பணத்தை பறித்து விட்டு தப்பியோடினார். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வினோத்குமாரை கைது செய்தனர்.

The post பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறித்த ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Robber ,Thoothukudi ,Vinod Kumar ,Tuticorin ,Satya ,Nagar ,Tiruchendur road ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணி