×

தூய வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி

 

விருதுநகர், செப்.10: ஆர்.ஆர்.நகர் தூய வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி நடைபெற்றது. விருதுநகர் ஆர்.ஆர்.நகர் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலய 48வது ஆண்டு திருவிழா ஆக.31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மாலை திருப்பலி, மறையுரையும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம் இரவு அருப்புக்கோட்டை புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அந்தோணி பாக்கியம் அடிகளார் தலைமையில் தேர்பவனி நடைபெற்றது.

தூய ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மெயின் ரோடு வழியாக ஆர்.ஆர்.நகர் முக்கு ரோட்டில் பொதுமக்கள் தரிசனத்திற்கு நிலை நிறுத்தப்பட்டு பின் ஆலயம் வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை நன்றி திருப்பலியுடன் கொடியிறக்கம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை பீட்டர் ராய், உதவி பங்கு தந்தை சாமிநாதன் தலைமையில் இறைமக்கள் செய்திருந்தனர்.

The post தூய வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி appeared first on Dinakaran.

Tags : Pure Velankanni Temple Therpavani ,Virudhunagar ,RR Nagar ,Thuya Velankanni Arogya Annai Temple 48th annual festival ,Thuya Velankanni Temple Therpavani ,
× RELATED பள்ளி வளாகத்திற்குள் லாரி புகுந்ததால் பரபரப்பு